Ad Widget

வடக்கில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா தோற்று!!

வடக்கு மாகாணத்தில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாள்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்திய போது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 60 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

Related Posts