Ad Widget

வடக்கில் 18 பேருக்கு கோரோனா தோற்று; ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பொலிஸார் உள்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 360 பேரின் மதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடித் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் வவுனியா தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வருகை தந்தவர்களிடம் எழுதுமட்டுவாழில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர். மற்றவர் கண்டியைச் சேர்ந்தவர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

Related Posts