Ad Widget

க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகள் 30ஆம் திகதி!

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

க.பொ.த சா/த, உ/த சித்தியடையாவிட்டாலும் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு: கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பட்டப் படிப்பொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
Ad Widget

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள. (more…)

வடக்கு மாகாணத்தில் 2011 இல் மட்டும் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். (more…)

தனியார் மாணவர்களும் தலைமைத்துவ பயிற்சியை கோருகின்றனர்

தலைமைத்துவ பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேக கட்டணத்தை செலுத்தவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் உணர்வு இல்லாதவர்கள், “தமிழ்“ சோறு போடுமா என கேட்கின்றனர்! தமிழ் இணையமாநாட்டில் இளந்தமிழ் பேச்சு

:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தொடக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் (more…)

11 வது தமிழ் இணைய மாநாடு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 இன்று 28.12.2012 ஆரம்பமாகியுள்ளது .  (more…)

ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் III இற்கு விண்ணப்பம் கோரல்

கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் III ஆம் வகுப்புக்குச் சேர்ப்பதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. (more…)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்! பரீட்சைகள் ஆணையாளரின் செய்தி இணைப்பு

2013ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைகள் நாளை 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறன. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். (more…)

2013 இல் நடைமுறைப்படுத்தும் பாடசாலை தவணை அட்டவணை; கல்வி அமைச்சால் வெளியீடு

அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

கல்வித் துறைசார் செயற்பாடுகள் சிறந்த படைப்பாளிகளை எதிர்காலத்தில் உருவாக்கும்.- ப.விக்கினேஸ்வரன்

கல்வித் துறைசார் செயற்பாடுகள் சிறந்த படைப்பாளிகளை எதிர்காலத்தில் உருவாக்கும். கல்வியுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் கல்விசார் செயற்பாடுகள் நிறைந்த சமூகத்தையும் உருவாக்க முடியும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச்செயலர் ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜனவரியில் ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்படுமென்று வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆர்.செல்வராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.வடமாகாணத்தில் உள்ள 12 வலயத்திலும் இருந்து 1500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். (more…)

188 ஆண்டுகளைக் கடந்தது உடுவில் மகளிர் கல்லூரி

88 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது உடுவில் மகளீர் கல்லூரி. உடுவில மகளிர் கல்லூரியின் 188 ஆம் ஆண்டு நிறைவு தினமும் கிறிஸ்மஸ் தினக்கொண்டாட்டமும் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. (more…)

இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கைநெறி

யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 28.12.2012  ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள்  வணிக பீடமானது முகாமைத்துவமாணிக்  கற்கை நெறியை  Bachelor of Business Management (BBM)  நடாத்துகின்றது. (more…)

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அடையாள அட்டை அவசியம்; பரீட்சை ஆணையாளர்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். (more…)

ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்படும்: பரீட்சைத் திணைக்களம்

எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று கைவிடப்படலாம் உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை கைவிடப்படலாம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (more…)

பல்கலை விரிவுரையாளர்களது பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று இறுதி முடிவு

பகிஸ்கரிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலமாக நீடித்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினமே இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். (more…)

யாழ் பல்கலை.வவுனியா வளாகத்தின் முதல்வராக கே.கே.அருள்வேல்

யாழ் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் கணக்கியல்த்துறையின் தலைவரும் வணிக மாணவர் ஒன்றியத்தின் காப்பாளருமான திரு கே.கே.அருள்வேல்  அவர்கள் வவுனியா வளாகத்தின் முதல்வராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் திங்கட்கிழமை ( 01 . 10 . 2012 ) தனது  பொறுப்புக்களை ஏற்கிறார்

புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம் இடங்கள்

2012 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான டர்சிகா குகநேசன், சாம்பவி குகநேசன் ஆகியோரே அம்மாணவிகளாவர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts