Ad Widget

க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள்திருத்திய முடிவுகள் இணையத்தளத்தில்

exam_dept2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மீளாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மீளாய்வு முடிவுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

எனினும் கடந்த வருடம் க. பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என இரண்டு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருபத்தைந்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவர்களில் ஒரு இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.doesnets.lk என்ற பரீட்சைத் திணைக்கள
இணையதளத்தினூடாக பார்வையிட முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts