Ad Widget

அரசாங்க பாடசாலைகளுக்கு இன்று முதல் 9வரை விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது. இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடமாகாண மாணவர்கள் கௌரவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...
Ad Widget

யாழ். இந்தியத் தூதரகத்தின் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

க.பொ.த உயர்தரம் கணிதப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியது!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம்...

க.பொ.த சா. தர பரீட்சை முறைக்கேடுகள் தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் அல்லது 0112785211 பொது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை...

ஜனவரியில் 8 நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி...

தனியார் வகுப்புகளுக்கு தடை

இவ்வருடம் 2014ஆம் ஆண்டுக்கான க.பொ.சதாரண தரப்பரீட்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் இன்று புதன்கிழமை (03) நள்ளிரவுடன் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான க.பொ.சாதாரண தர அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டார். விடைத்தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் கூறினார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண...

மாதகல் நுணசை மகா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள்

மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் நேற்று முன்தினம் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. (more…)

கல்வியியற் கல்லூரிகளில் கற்பவர்களுக்கும் பட்டதாரி சான்றிதழ் – கல்வி அமைச்சர்

கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் அனைவரும் 4 வருடங்களில் பட்டதாரிகளாகவே வெளிவருவார்கள். இதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ் பல்கலையில் வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் (எம்.பி.ஏ) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி ரி.வேல்நம்பி, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

இரண்டு பாடசாலைக்கு ஒரு ஆசிரியர்

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவுவதால் ஒரு ஆசிரியர் இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருவதாக, வலிகாமம் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி குறைப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. (more…)

இலவச ‘கிட்டார்’ பயிற்சி

இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க விசேட திட்டம்

க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

தரம் 5க்கான வெட்டுப்புள்ளி திங்கள் வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

கல்வியாண்டு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு – வீதியில் இறங்கிய மாணவர்கள் !!

காலி, கலுவெல்ல இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிலைய (SLIATE), மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts