- Saturday
- June 21st, 2025

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்....

2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை Exam சுட்டெண்" என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலமும் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்...

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2006 -2007 வரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 16.1 சதவீதமாக காணப்பட்ட இந்நாட்டு கணினி கல்வியறிவு 2015ம் ஆண்டின் போது நூற்றுக்கு 27.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கணினி கல்வியறிவு தொடர்பில் புதிய ஆய்வறிக்கையை வௌியிட்ட போது இதனை தெரிவித்துள்ளது.இதில் , ஆண்களிடம் கணினி கல்வியறிவு நூற்றுக்கு 29.1 சதவீதமாகவும் ,...

வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக...

யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை...

உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன்...

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீது கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள்...

2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாமல், மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான பயிற்சி மஹரகம, கண்டி, வெயாங்கொட, களுத்துறை, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன. பாடசாலைக் கல்வியை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர்...

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc என...

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...

பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கல்வித் துறைக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளை கழித்து, வைத்தியர்களுக்கு மட்டும் அச் சலுகையை பெற்றுக் கொடுப்பது கவலையளிப்பதாக,...

உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமது தரப்பில் இருந்து எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்பதை உண்மையான விடயம் எனவும் யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை...

உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...

கல்வியியல் கல்லுரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இம்முறை பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி பிரிவின்...

All posts loaded
No more posts