Ad Widget

யாழ்ப்பாணத்தில் எட்டாவது தடவையாக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!

எட்டாவது தடவையாக யாழ் மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 27தொடக்கம் 29 வரை இடம்பெறும் வர்த்தகக் கண்காட்சியில் க.பொ.த சாதாரண, உயர்தர மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் “கல்வி யாழ்ப்பாணம் 2017” என்ற பெயரில் உயர்கல்வி தொழில் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கணனி கற்கை நிலையங்கள், ஹோட்டல் நிர்வாகமும் உல்லாசப்...

தமிழக முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு கடையடைப்பு!

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் 2.00 மூடுமாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அல்லலுறும்போதெல்லாம், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத்...
Ad Widget

வவுனியாவில் கொள்வனவு செய்யப்படும் அரிசி யாழில் அதிக விலையில் விற்பனை

வவுனியாவில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் யாழ். மாவட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில்...

பால்மாவின் விலை அதிகரிக்கும்?

பெறுமதி சேர் வரித் (வற்) திருத்தத்துக்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை, நூறு ரூபாயினால் அதிகரிக்கப்படக்கூடும் என்று, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும், பால்மாவுக்கு “வற்” அறவிடப்படவில்லை. ஆனால், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தத்துக்கமைய, பால்மாவுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று, மேற்படி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்....

கால்நடை தீவனத்தின் நிறையில் மோசடி!! பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்எச்சரிக்கை!!

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...

எழுக தமிழ் : தமிழரசுக் கட்சி, வணிகர் கழகம் ஆதரவில்லை

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன. தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித்...

கூடுதல் விலையில் சீனி விற்றால் கடும் நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார். இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை,...

இலங்கைத்தயாரிப்பு முச்சக்கரவண்டி விரைவில் சந்தைக்கு!

மிக விரைவில் இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி சந்தைக்கு வரவுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி உற்பத்தி நிறுவனமான மார்க்ரோ அறிவித்துள்ளது. இந்திய பஜாஜ் நிறுவன முச்சக்கர வண்டிக்கு ஒப்பானதாக இந்த தயாரிப்பும் அமைந்துள்ள போதும் இதன் சந்தை விலை 475000 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேறுகிறது!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார்...

புதன்கிழமை வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 31ஆம் திகதி புதன்கிழமை...

யாழில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதலீட்டாளர்கள் மாநாடு

யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடானது நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை வடக்கில் அதிகரிப்பதற்காக இந்த மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண...

வான்களின் விலைகள் பத்து இலட்ஷத்தால் குறைவடைகின்றது !!

வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152...

மாற்றுத்திறனாளிகளால் யாழ்ப்பாணத்தில் புதியதொரு முயற்சி!

சுயதொழிலை அடிப்படையாக கொண்டு தாமே யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, ஓர் உற்பத்திப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் பாவிக்கும் சன்லைட் (sunlight) சவர்க்காரம், Surfexel அல்லது சம்போ(shampo)க்கு பதிலாக புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதில் வாசனைக்காக compfort போன்ற ஒரு கலவையயையும் சேர்த்துள்ளனர். இதனால் சலவை செய்யும் ஆடைகள் வாசனையாகவும் இருக்கும். யாழ்ப்பாணம் கல்வியன்காட்டிலே...

நிர்ணய விலையை மீறுவோருக்கு அரசு எச்சரிக்கை

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்...

கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும்...

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விலைகள் பின்வருமாறு, கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா பருப்பு - 169 ரூபா சீனி (1 கிலோ கிராம்) - 95 ரூபா நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் - 495 ரூபா நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம்...

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்தை திறக்கப்படாதது ஏன்?

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...

வடக்கில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது. இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ் வணிகர் கழகத்திற்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது. இவ்வாறான...

பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவு ஆரம்பம். முறைப்பாட்டு எண்களும் அறிவிப்பு

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான...

வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு

கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்...
Loading posts...

All posts loaded

No more posts