Ad Widget

ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 154.54 ரூபாயாக பதிவாகியுள்ளது.

Related Posts