சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம், இளைஞன் தலைமறைவு!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில் வசித்த அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சிறுதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குறித்த சம்பவம் இருவாரங்களுக்கு முன் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பில் ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியின்...

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...
Ad Widget

பூநகரி பிரதேச மருத்துவமனையில் நீர்ப்பற்றாக்குறையினால் நோயாளர்கள் அவதி!!

பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...

ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால்...

கொக்கிளாய் விகாரை; காணி உரிமை சர்ச்சையால் நிறுத்த முடியாத நிலை

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...

தமிழீழ வைப்பகத்தின் தங்க நகை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு லூர்த்துமாதா வீதியில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்தத் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் உள்ள காணியின் கிணற்றுக்குள் தங்க நகைகளைப் போட்டு...

யுத்தத்தின் கோரம்: இளைஞன் தற்கொலை!!

கிளிநொச்சி உதயநகரில் 30வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த 31 வயது இளைஞன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். சிவலிங்கம் சிவச்செல்வன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். இவருக்கு கடந்த யுத்தத்தின்போது மனநோய் ஏற்பட்டதாகவும், பின்னர் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என மரணவிசாரணையின்போது தெரியவந்துள்ளது என இவரது மரணவிசாரணையை விசாரணைசெய்த...

“சுண்ணாகம் நிலத்தடி நீரில்எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது” அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி இறக்கும் தனியார் பஸ் தீக்கிரை

பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ், தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார், நீர் ஊற்றி அணைக்க முயன்ற போதிலும், அது பயணிக்காத நிலையில், குறித்த பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீக்கிரையான பஸ்ஸின் உரிமையாளர் கண்டியைச்...

கொக்கிளாய் விகாரையை அகற்றுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்!

கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருகின்றது. குறித்த நிர்மாணம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர்...

வட மாகாண நீர்விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானது. வடமாகாணத்தின் நீர்வழங்கல்...

சி.ஐ.டி எனக்கூறி கொள்ளை: 08 பேர் கொண்ட குழு கைவரிசை

மல்லாவி, கோட்டை கட்டிய குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள், 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை வேளை, வீட்டுக்கதவைத் திருடர்கள் தட்டியபோது, வீட்டிலிருந்தோர் கதவைத்...

அலையெனத் திரண்ட கூட்டுறவாளர்களால் அதிர்ந்தது கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப்...

கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம்-கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச்...

இராணுவத்தால் மாணவிகளுக்குக் கடும் தொல்லை!

புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச்சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன். காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும்இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்குமுறைப்பாடுகள் கிடைத்துள்ளன...

கிளிநொச்சி அமர்வுகளில், காணாமற்போனோர் குறித்து 283 புதிய முறைப்பாடுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது. இந்த அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1146 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 705 பேர் சாட்சிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 283 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி...

த.தே.கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் 20 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசமானது!

நில அளவைத் திணைக்களத்தினால் பல இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் கடந்த செவ்வாய்க்கிழமை செம்மலைப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசம் சென்றுவிட்டது. இது குறித்துத் தெரியவருவதாவது, படையினரின் பொதுத் தேவைக்காக காணிகளை அபகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அளவீடுகள் நடைபெற்று வருகின்றது....

காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிடிக்காதே பிடிக்காதே காணிகளைப் பிடிக்காதே', 'அரச அதிகாரிகளே இராணுவ...

காணாமல் போன மகள், அருட்சகோதரிகளின் கட்டுப்பாட்டில் -கண்ணீருடன் தாய்

கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் காணாமல்போனோா் தொடா்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமா்வில் தொிவித்துள்ளாா். இதனையடுத்து ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்திற்கு முறைப்பாடு செய்த தாயாருடன் சென்றனா். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை...

தமிழீழ வைப்பகத்தின் தங்க நகை புதையல் மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts