பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...

வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளம்: சம்பிக்க ரணவக்க

வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) 23 கீழ் 2 இல் சிறப்புக்கட்டளைக்கு அமைய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
Ad Widget

கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம்!

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டம்!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...

கேப்பாபுலவில் இராணுவத்தின் எச்சரிக்கை பெயர்ப் பலகையில் மீண்டும் மாற்றம்!

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...

தீர்வின்றி தொடரும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...

தீயில் எரிந்து இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்

புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன. சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது....

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக...

கேப்பாப்பிலவு படைமுகாம் கட்டடங்கள் புனருத்தாபனம்!

கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...

கிளிநொச்சியில் டெங்குக் காய்ச்சலால் 17 வயது மாணவி பலி!

கிளிநொச்சி மாவட்டம் ஜெயந்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன. மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது எனவும்...

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்; விமானப்படை எச்சரிக்கை

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...

குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று(17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக கிளி. வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின்...

நாய்களை ஏவிவிட்டு மக்களைக் கலைக்கும் இராணுவம்!

இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

கேப்பாபிலவு போராட்டம் : வீதியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி!

கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு...

பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் இணைந்துகொண்டனர் மாணவர்கள்!

நேற்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று பாடசாலை மாணவர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இருப்பினும் அண்மையில்...

கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம்

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் ​நேற்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில்...

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது

வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன்...

கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...

கேப்பாப்பிலவை வட்டமிட்ட விமானம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள்...
Loading posts...

All posts loaded

No more posts