Ad Widget

மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியை

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் அக்கினியுடன் சங்கமமானது.

ஈழத்து எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்று.

இதனை அடுத்து, இரணைமடு பொது மயாணத்தில் அக்கினியோடு சங்கமமானது.

இந்த இறுதி நிகழ்வில் சாந்தனோடு பணியாற்றிய பல கலைஞர்கள், மற்றும் கலையுலக நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பெரும திரளான பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.

Related Posts