வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு! – பொலிசாருக்கு அதிகாரம்

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்

நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் 'கபே' அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை...
Ad Widget

பாரளுமன்ற தேர்தல் தொடர்பிலான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

குறுந்தகவல் மற்றும் இணையத்தளம் ஊடான தேர்தல் பரப்புரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...

வாக்காளர்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளிக்கச் செல்லும் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகவும் அவதானமாகவும் இருத்தல் அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு தேர்தல் வன்முறைகளும் முறைக்கேடான தேர்தல் பிரசாரங்களும் இடம்பெற்றுள்ளதாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின்...

தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை!

தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போதியளவு கால...

இன்றுடன் ஓய்கிறது பிரசார யுத்தம்!

எதிர்ரும் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,...

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம்!

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது. அவ்...

தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கடற்படையினர் கொண்டுசெல்வர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் தீவுப்பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்களின் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். 'எதிர்வரும் 16ஆம் திகதி காலை முதல் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு...

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் விசாரணை

தேர்தல் விதிமுறையை மீறி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சார்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஊழியர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (11) சாவற்கட்டு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்...

ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், தேர்தல் சட்டத்தை மீறியோர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளோர், சுற்றாடல் அழிவு ஏற்படுத்தியோர்,...

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச பஸ் சேவை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக இலவச பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச செயலகத்திலிருந்து குஞ்சர் கடையடி, நெல்லியடி, கொடிகாமம் வீதி, துன்னாலை கலிகைச்சந்தி, மந்திகைச்சந்தி, மாலுசந்தி, உடுப்பிட்டி, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம் ஊடாக...

யாழ்ப்பாணத்தில் 13 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றம்

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு...

அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ​தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்த வகையில் வாக்காளர்களின் தூரத்தை கருத்திற்கொண்டு குறைந்தது அரைநாள் முதல் ஒருநாள் வரையான விடுமுறை வழங்கப்பட வேண்டும்...

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...

வாக்களிக்கத் தவறாதீர்கள்…! : யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வேண்டுகோள்

எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.... எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை வெவ்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமின்றி ஒரே கட்சியின் வெவ்வேறு வேட்பாளர்களும் வெளியிட்டு வருகின்ற நிலையில் ‘‘மெய்ப் பொருள் காண்பது...

ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்களிப்பது மிக முக்கியம்.வீட்டில் முடங்கிக் கிடக்காதீர்கள்! – முதல்வர் அறைகூவல்

எனது அன்பார்ந்;த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை...
Loading posts...

All posts loaded

No more posts