இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்யக் கோருகிறது அமெரிக்கா!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின்...

இலங்கையில் கஞ்சா செய்கை! ஏற்றுமதி செய்யவும் முடிவு!

ஆயுர்வேத மூலிகையாக இலங்கையில் கஞ்சா உற்பத்திசெய்யப்போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்துகொண்டார். இதன்போதே போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்....
Ad Widget

எம்மைக் கொல்ல தீவிரத் திட்டம்

தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்...

மஹிந்தவும் சகாக்களும் விரைவில் கைதாவர்!

"மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்"இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. "மஹிந்த ராஜபக்‌ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல...

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து! இராஜதந்திரிகளிடம் முறையிட்டுள்ளோம்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் கூட்டு எதிரணியினர் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் முறையீடு செய்துள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து தங்கள் நாடுகளிடம் தெளிவுபடுத்துமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் கேட்டுள்ளார் என...

புகையிரதத்தில் மோதி 3பேர் பலி!!

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோதி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின்...

தமிழினியின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில்...

ஹம்பாந்தோட்டையில் 100 தொழிற்சாலைகள் அமைக்க சீனாவுக்கு அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்ள தான் எதிர்பார்ப்பதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் சிறீலங்காவுக்குக்...

13 பல்கலை மாணவர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

களனி பல்கலைக்கழக நிர்வாகிகளின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 13 மாணவர்களை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதால் கடந்த 26ம் திகதி மாலை 05.00 மணிக்குள் அனைவரையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சில மாணவர்கள் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ளாது அங்கு தங்கியிருந்துள்ளனர். இவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு...

டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டம் பாயும்!

டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும், மக்களை தெளிவுபடுத்துவதால் மாத்திரம் டெங்கு நோய் பெருகுவதை தடுக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை...

வெள்ளைவான் கடத்தல், கைது போன்றவற்றை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கொழும்பு புறக்கோட்டையில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆரம்பமாகிய பேரணி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் கிளை வரை சென்றது. அதன்பின்னர் ஐ.நா அலுவலகம் முன்பாக அமைதியான...

12 இலங்கையர்கள் ஆஸி.யில் இருந்து நாடு கடத்தப்பட்டமை உறுதி

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், 12 இலங்கையர்கள், கொழும்புக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. தற்போது இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் வௌிநாட்டு...

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களில், கோத்தாவின் நெருங்கிய சகா

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. பனாமா ஆவணங்களின் மற்றொரு தொகுதி நேற்று வெளியானது. இதில் சிறிலங்காவைச் சேர்ந்த, நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்...

மஹிந்தவின் உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை முன்னிலையாகினார். இதன்பின்னர்...

பகிடிவதை தடைசெய்யப்பட்ட ஒன்று என மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அல்ல ஒன்றிரண்டில் பகிடிவதை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. உலகில் எங்கும் இதுபோன்ற பகிடிவதைகள்...

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து அழுத்தங்களோ, கோரிக்கையோ இல்லை

பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து சில ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

நாடு முழுவதிலும் மாலையில் இடியுடன் கூடிய மழை

நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத்...

யாழில் குற்றச்செயல்கள்; சமூக நலன் விரும்பிகள் கொழும்பில் கூடி ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவலையும் விசனமும் அடைந்துள்ள சமூக நலன்விரும்பிகள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது. யாழ்.ஆயர் ஞானப்பிரகாசம் உட்பட்ட கிறிஸ்தவ, இந்து மத குருமார், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், ஊடகத்துறையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைகள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை,...

மகிந்தவிற்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டும்! ஐநாவுக்கு கடிதம்!

முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜெனீவாவில் உள்ள சர்வதேச பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அவருக்கு...

டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத்...
Loading posts...

All posts loaded

No more posts