வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோதி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது உயிரிழந்த ஆண் நுவரெலியாவை சேர்ந்த சுப்பிரமணியம் கமலநாதன் மற்றும் பெண் மஸ்கெலியாவை சேர்ந்த ஆர்.மகேஷிகா என தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த மற்றுமொரு நபர், பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.