Ad Widget

இலங்கையில் கஞ்சா செய்கை! ஏற்றுமதி செய்யவும் முடிவு!

ஆயுர்வேத மூலிகையாக இலங்கையில் கஞ்சா உற்பத்திசெய்யப்போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்துகொண்டார்.

இதன்போதே போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மூலிகைக்கு கஞ்சா அத்தியாவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts