20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு

நாட்டில் உள்ள 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா,...

இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!! யாழில் 15 நாட்களில் வெதுப்பகங்களை மூடும் நிலை!!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை...
Ad Widget

367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வழமைக்கு திரும்பும் அரச சேவை! அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்!!

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக,...

253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்

10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் – சம்பிக்க எச்சரிக்கை

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில்...

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள்...

QR குறியீடு தொடர்பில் பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட QR...

இலங்கையில் கோவிட் மரணங்கள் அதிகரிக்க கூடும் – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

கோவிட் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், எனவே நோயைத் தடுப்பதற்கு பொதுமக்களின்...

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடுமையான மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய,மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும்,தென்மேற்கு கடற்பகுதியிலும் மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்,மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை...

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய தினம் கருத்துக்களை பெற்றுக் கொண்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சாரக்...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!!

இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கோவிட், டெங்கு தொற்று அல்லது வேறு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்கள், வீதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் பாதுகாப்பு...

ஓகஸ்ட் 01 முதல் QR குறியீடு முறையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் ( QR குறியீடு) இல்லாவிட்டால் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி முறைக்கு எரிபொருள் விநியோகம் உள்பட ஏனைய அனைத்து முறைகளும் ஒகஸ்ட் முதலாம்...

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்....

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை டல்ஸிற்கு 82 வாக்குகளும் அனுரவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன, இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.

ஜனாதிபதி பதிவிக்கு மும்முனை போட்டி ! ரணில், அநுரகுமார, டலஸ் களத்தில் !

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய , பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ...

பெற்றொல் கப்பலும் நாட்டை வந்தடைந்தது!! – தூர இடங்களுக்கு முதலில் விநியோகம்!!

03 வாரங்களுக்கு மேலான காலப்பகுதியின் பின்னர், பெற்றோல் ஏற்றிய முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. கப்பலில் உள்ள பெற்றோலின் மாதிரி பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 02 டீசல் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட டீசலை இறக்கும் பணி இறுதி இலக்கை அடைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர...

இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனம்! அதிவிசேட வர்த்தமானி வெளியானது

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான...
Loading posts...

All posts loaded

No more posts