Ad Widget

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொது இடங்கள், வீதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் பாதுகாப்பு முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதனை கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Posts