Ad Widget

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கும் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

ஸ்கான் இயந்திரத்துக்குள் மரணித்த மகளின் விசாரணையை மூடி மறைக்க இடமளிக்க வேண்டாம்: தாய்

நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார். (more…)
Ad Widget

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள்!

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன. (more…)

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். (more…)

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் ?

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)

முதுகெலும்பில்லாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; அஸாத் சாலி

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என முஸ்லிம் தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது.-மகிந்த

நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)

புதிய அமைச்சர்கள் 10 பேர் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம்

இலங்கையின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. (more…)

இராணுவ விசாரணை சபையின் பரிந்துரைகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. (more…)

சவூதிக்கான பணிப்பெண் வயது 25 ஆகவும், சிங்கப்பூருக்கு 21 ஆகவும் வரையறை!– அமைச்சர் கெஹலிய

இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கான வயது எல்லை குறைந்தது 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசாமி கைது! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)

இறுதிப்போரில் காணாமல் போனவர்களுக்கு, இந்தியா மற்றும் ஐ.சி.ஆர்.சி.யே பொறுப்பு: பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அழைக்கவில்லை: அமைச்சர் ஜோன் செனவிரத்ன

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக அவர்களை நாம் கொழும்புக்கு அழைக்கவில்லை என்று அமைச்சர் ஜோன் செனவிரத்ன இன்று தெரிவித்தார் (more…)

கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

திருமணப்பதிவு வரியிலிருந்து விலக்களிக்கவும்: ஆதிவாசிகளின் தலைவர்

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். (more…)

தேசிய பாதுகாப்பு இணையத்தளம் முடக்கம்

இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது. (more…)

பிரதம நீதியரசராக மொஹான் பிரீஸ் சத்திய பிரமாணம்

44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பிரீஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். (more…)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்

இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (more…)

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts