- Sunday
- July 12th, 2026
தென் ஆபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென் ஆபிரிக்கா சென்றிருக்கும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள எப் என் பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வல் கலந்து கொண்டார். (more…)
சிரேஷ்ட ஜப்பானிய ராஜதந்திரியான யசுசி அகாசி இன்று காலை சனாதிபதி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு இலங்கையிலும் இரண்டு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. (more…)
தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா, பொதுநலவாயத்தில்...
வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின்...
நெல்சன் மண்டேலா காலமாகிவிட்டார். அறக்கும்போது அவருக்கு வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார். மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில்...
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது (more…)
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி...
வடக்கிற்கு 398 ரூபா, கிழக்கிற்கு 270 ரூபா மட்டுமே! இலங்கையில் உள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களின் திறமைகளை விருத்தி செய்வதற்காக தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் (more…)
நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலையங்கள் அமைப்பு, துறைமுகங்கள் விரிவாக்கம்,வீதி அபிவிருத்தி, சுற்றுலா விடுதிகள் அமைப்பு என எவையும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கையில் தங்கியிருந்த குறுகிய காலத்தில் இரசாயனப் பொருட்கள் கலவையற்ற தீவனத்தை உட்கொண்ட கோழிகள் இட்டு முட்டைகளை மட்டுமே உணவுக்காக எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. (more…)
ரஷ்யாவின் கசான் நகரில் இவ்வாரம் முற்பகுதியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார். (more…)
வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. (more…)
நைஜீரியாவின் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தார் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது இலங்கை வந்திருக்கும் நைஜீரியாவின் உப ஜனாதிபதி மொஹம்மத் நமாதி சம்போ (more…)
கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர் மக்ரே தனது ருவிட்டரில் தாம் விருப்பமின்றியே கொழும்புக்கு செல்வதாக தெரிவித்திருக்கின்றார் கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு...
இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை தயாரித்து இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை உலகம் முழுக்கப் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
