- Sunday
- September 21st, 2025

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது இது தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பான தகவல்களை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பொதுப்பயன்பாடுகளின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ' 13 அம்பயர்...

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக...

தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியுமான விதத்தில், தமிழ் மொழியில் கதைப்பதற்கான ஏற்பாடுகளை 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்தினூடாக செய்து கொடுத்துள்ளதாக வட மாகாண பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸுக்கு வருகை தரும் எந்தவொருவரும் தமது பாஷையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவகாசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற பொலிஸ் மா அதிபர்...

சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. தற்போது செயற்பாட்டில் உள்ள இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளதாகவும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் என்றடிப்படையில்...

இந்த வருடத்தில் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் 1570 பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி அவசர நடவடிக்கை பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் பேஸ்புக்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம்...

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம் சென்று அல்லது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கடன் அடிப்படையில் பல நிதி உதவிதிட்டங்களை செய்கின்றன. ஆனால் அதை வசூலிப்பதற்காக கிராமங்களிற்கு அல்லது கடனாலிகளின் வீட்டிற்கு நேரகாலமின்றி கடனை வசூலிப்பதற்காக recovery officer என்றொருவர் சென்று கடன்களை...

யாழ்.தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையில் முதலீடு செய்யுமாறு மானிடம் அறக்கட்டளை சார்பாக அன்புரிமையுடன் வேண்டுகின்றோம். பின்வரும் தெரிவுகளில் ஒன்றின் மூலம் நீங்கள் உதவலாம் . ரூ.ஒரு இலட்சத்துக்கு குறையாத முதலீடு ஒரு வருடத்தின் பின் பங்கு லாபம் ரூ.ஒரு இலட்சம் / 50,000 ஒரு / இரு வருடத்தில் மீளளிக்கும் தொகை வருடம் 25,000...

தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழைத்து செல்லவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் 2ஆம் வட்டாராம் பகுதியில் 68 பேர் சுவிஸ் . கனடா போன்ற தேசங்களிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.VNK buisness network என்ற தனியார்...

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 2-09-2016 ஐ.நா செயலாளர் யாழ்வரும்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு யாழ் பொது நூலகம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ஊடக அறிக்கையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்

புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. நாளை சனிக்கிழமை 03 ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்ததினத்தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவம் நிலையில், நேற்று வியாழக்கிழமை யாழ். போதனா...

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும்,...

சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது...

விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...

ரஜரட்ட உள்ளிட்ட உலர் வலயப் பகுதிகளில் பரவியுள்ள சிறுநீரக பிரச்சினைக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள க்லய்போசேட் கிருமி நாசினி திரவம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பின்னரும் தூள்களாக பக்கற்றில் அடைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஹரியனா மாநிலத்தில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு கடல் மார்க்கமாக இவை கொண்டு வரப்பட்டு சந்தைகளில்...

அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில்...

யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது. இன்று (30), நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை...

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 31ஆம் திகதி புதன்கிழமை...

நாளை 30 ஆம் திகதி அனைவரையும் துக்க தினமாக அனுட்டிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். இத்தினத்தில் சர்வதேசம் தலையிட்டு எமக்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமெனக் கோரி காணாமல் போனோரின் குடும்பங்கள் வடக்குக் கிழக்கு முழுவதும் அடையாள போராட்டங்களை நடாத்தவுள்ளனர். அன்றைய தினம், அமைதியான முறையில்...

All posts loaded
No more posts