- Tuesday
- November 11th, 2025
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்ததாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறுகிறார். அந்தக்...
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 1.5...
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள்...
பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது. பால்மா கிலோகிராம் ஒன்றின் விலையை 810 ரூபாயிலிருந்து 927 ரூபாய் வரை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய, 325 ரூபாய்க்கு விற்கப்படும் 400 கிராம் பால்மா, 375...
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றுக்காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்டெட்டின்ஸ் (STATINS) இருதயநோய் தடுப்பு மருந்துகளை தேவையில்லாத நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக முழுவதும் சுமார் 8 இலட்சம் மக்கள் குறித்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இம் மருந்தானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், கடுமையான இருதய நோய்...
சுதந்திரமான தனித்துவம் மற்றும் பலதரப்பட்ட அதியுயர் நன்னெறி தரங்களை கொண்ட தொழில் நிபுணத்துவமும் பொறுப்புணர்வும் அமைந்த பலதரப்பட்ட பரந்த அடிப்படையிலான தகவல்கள் மற்றும் யோசனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்புவாய்ந்தவை ஊடகங்களாகும். பொதுமக்களுக்கான ஒன்றுகூடலில் சிறந்த ஜனநாயக அடிப்படையிலான கருத்துக்களை கலந்துரையாடுதல், இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி பேணிப் பாதுகாப்பதற்கான செய்முறையாகும். இதற்கென அரசாங்கம் பயன்தரக்கூடிய செய்தி ஊடக...
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்போது 09 தலைப்புக்களின் கீழ் பேசப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகள்...
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார். யாழ்ப்பாணத்தில் தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றயதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த...
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை திருத்தம் சம்பந்தமாக யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான கருத்துக்களை எழுத்து மூலமாக வழங்குமாறு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறினார். செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப்...
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார்...
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் கலைமாணித் தேர்வு பகுதி 1 - 2013 (வெளிவாரி) பரீட்சையை, எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளையும் நாளை 08ஆம் திகதி தொடக்கம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக...
யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக, எதிர்வரும் சனிக்கிழமையும் (03), ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை, ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பொது மக்களின் தேவைகளை...
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் இக் காலப் பகுதியில் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, குடி...
Loading posts...
All posts loaded
No more posts
