முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக...

யாழில் வயிற்றோட்டம், கொலரா பரவும் அபாயம்!! அரச மருத்துவ சங்கம் எச்சரிக்கை!!

யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
Ad Widget

வடமராட்சியில் நாளை கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த கையெழுத்து போராட்டமானது,...

கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள்...

பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம்!

பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற...

மருந்துகளின் விலை குறைக்கப்படவில்லையா? உடன் அழையுங்கள்!

மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இவ்வாறு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 011 30 71 073 மற்றும் 011 30 92 269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் தெரிவிக்க முடியும்.

இன்று முதல் அதிகரிக்கின்றது ‘வற்’ மற்றும் என்.பி.டி

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட...

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...

சேதமடைந்த பணத் தாள்களை வாங்காதீர்- மத்திய வங்கி எச்சரிக்கை

தேவையற்ற விதத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை பொறுப்பேற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவ்வாறு பொறுப்பெற்பவர் நஷ்டமடைய வேண்டியேற்படும் எனவும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற பணத் தாள்களுக்கு மத்திய வங்கியினால் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், கொடுக்கல், வாங்கல் செய்யும்போது இவ்வாறான பணத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும்,...

வடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம்

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்...

தெற்கு அதிவேக பாதையின் வேகம் 60 ஆக மட்டுப்பாடு

நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பாதையில் இடம்பெற்று வரும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள்,...

 ‘சம்சுங் நோட் 7’க்கு மற்றுமொரு தடை

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் 'சம்சுங் நோட் 7' திறன்​பேசிக​ளை கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த திறன்​பேசிகளுடன் தமது விமான சேவையைப் பெற்றுக்கொள்ள வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மின் வெட்டு நேரம் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில்!!

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது. இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும்...

யுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை! 5ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்கவும்

யுத்தத்தில் முகத்தில் காயமடைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த சத்திரசிகிச்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2...

கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையை நிறுத்துமாறு வேண்டுகோள்

கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையாளர்கள் உடனடியாக அதன் பாவனையை நிறுத்த வேண்டும் என சம்சுங் நிறுவனமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. சம்சுங் கலக்ஸி நோட் 7 கையடக்கத் தொலைபேசியில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள் மற்றும் தீ விபத்துக்களை அடுத்தே சம்சுங் நிறுவனம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. ஏற்கனவே கலக்ஸி நோட் 7 கையடக்க...

‘பொலிஸார் தவறினால் எனக்கு அழையுங்கள்’ பொலிஸ்மா அதிபர்

பொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்றுச் சனிக்கிழமை (08) அறிவித்துள்ளார். ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொது மக்கள் எண்ணினால், 0718592020 என்ற...

ஓய்வுபெறுவதற்கு இன்று முதல் இணையம் மூலம் பதிவு செய்யலாம்

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக...

கால்நடை தீவனத்தின் நிறையில் மோசடி!! பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்எச்சரிக்கை!!

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...

பதிவு செய்யாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய இன்று முதல் அவகாசம்

பல்வேறு காரணங்களினால் இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார். இந்த அவகாச காலம் இன்று (03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் எனஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலத்துக்குள் 450 வேகம்...
Loading posts...

All posts loaded

No more posts