மணித்தியாலயத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகக் கட்டுபாடு

இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தை பிற்போடத் தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆரம்பிக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருவார காலம் ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Ad Widget

100 வயதைத் தாண்டியோர் பற்றிய தகவலைத் தரவும்!

இம்முறை, முதியோர் தினத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நூறு வயதைத் தாண்டியவர்களையும்,15 பிள்ளைகளைக் கொண்ட 75 வயதைத் தாண்டிய பெற்றோர்களையும் கௌரவிப்பதற்காக, அவர்கள் தொடர்பில் தகவல்களைத் தங்களுக்கு வழங்குமாறு அச்செயலகம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை, பிரதேச செயலகத்தில், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குமாறு, அச்செயலகம்,...

தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? : யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர்...

தமிழரசுக்கட்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சி : எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதில்!!!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. “சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவுள்ளனர்....

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அச் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

மயிலிட்டி மக்களுக்கு அவசர அழைப்பு!

இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...

போக்குவரத்துக் குற்றங்களுக்கு தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி , தண்டப்பண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு தினத்தில் இருந்து மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்டப்பணத்தை செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதி வரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக...

புயல் ஆபாயச் செய்தியில் உண்மையில்லை! : வளிமண்டல திணைக்களம்

இலங்கைக்கு புயல் காற்று வீச கூடும் என  வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடருந்துடன் செல்பி எடுக்க தடை!

தொடருந்துடன் ஆபத்தான வகையில் செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்துக்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான...

தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப்பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு

தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது. இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full...

தற்கொலை சம்பவங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில்...

நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் தண்டனை: மத்திய வங்கி

இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ள நாணயத்தாளை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளுமாறும்...

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்...

தமிழ்மக்கள் பேரவையின் அவசர ஒன்றுகூடல்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...

இயற்கை அனர்த்தத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

இயற்கை அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான...

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின் தடை

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண...

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி...

இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்: போக்குவரத்துப் பொலிஸ்

சாரதிகள் உட்பட போக்குவரத்துத் தொடர்பான சட்டங்களை மீறுவேர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் சாரதிகளுமே காணப்படுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதை ஒழுங்கு...
Loading posts...

All posts loaded

No more posts