- Friday
- June 20th, 2025

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு...

“உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியொன்று இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விண்மீன்கள் அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயமாகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல, பொது நிகழ்வுகளில்...

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்பதனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் 7...

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தையும் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு, சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய அமர்வில் சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்கப்படுவது...

நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய...

ஜப்பானில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஐ.எம்.ஜப்பான் நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதற்கமைவாக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மொழித் தேர்ச்சியில் ஜே.எல்.பி.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரத்துடனான கல்விச் சான்றிதழைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு பணியாளர் சேவைக்கான தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும்...

பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான...

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இவற்றுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் விண்ணப்பிக்கலாமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதம் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு...

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...

தைரொட்சைட் (கண்டக்கழலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் து.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில்...

முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாட்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு...

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது. அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள்,...

இளையவர்களின் விவாதத்திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் விவாதச்சுற்றுப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதுக்குட்பட்ட இளையவர்கள்(திறிந்த பிரிவு) என இரு பிரிவுகளாக இவ் விவாதச் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான போட்டி யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் திறந்த பிரிவு போட்டிகள் நாடாளவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளன. திறந்த...

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58...

நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...

நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் பெற்றுள்ள நிலையில், வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு, வளிமண்டலத்தில் நீராவியின் அளவு மேலோங்கியுள்ளதால் இந்த சூடான காலை நிலவுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார். அத்துடன், இவ்வாறான...

All posts loaded
No more posts