பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு தொடர்பான ஊடக அறிக்கை

பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம்...

போலி உறுதி முடித்து காணி விற்பனை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை...
Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளைமுதல் புதிய நடைமுறை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Accident and emergency unit with modern facilities) நாளை சனிக்கிழமை தொடக்கம் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளது. எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் நாளை புதிதாக திறந்து...

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்!!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ் மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிவித்தலினை இங்கு இணைக்கின்றோம். இந்த புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும்...

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும்...

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவிழாக்களை...

குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றும் வெடித்து சிதறியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

யாழில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைகள்!!

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி...

வாள்கள், இராணுவச் சீருடைகள் இருப்பின் இரண்டு நாட்களுக்குள் ஒப்படையுங்கள்!!

வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன. அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது...

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்தில் ஊடுருவல்!!

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்திலும் ஊடுருவலாம் என அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளது. இதுதொடர்பில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் இலக்கங்களுடனான விவரம் வவுனியா பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லொறி ஒன்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டி உள்பட 19 வாகனங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சகல வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்!

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும். உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சகல விபரங்களும் பேணப்பட...

உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடுவோருக்கு சிறைத் தண்டனை!!

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பரப்புரைகளினால் கொட்டாஞ்சேனை பொது...

பாதுகாப்புத் தரப்பினரின் விசேட அறிவித்தல்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான...

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை!- இராணுவ புலனாய்வு அதிகாரி

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும், அதனை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதென்றும்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்மா அதிபர் ரஞ்சித்...

‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வெடிபொருள்களுடனான வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...

பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல்

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அதில்...
Loading posts...

All posts loaded

No more posts