Ad Widget

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்!

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts