சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கிளிநொச்சி பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

கிளி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த கோவில் கட்டுமானப்பணி உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பது உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் தீவிரமாகியுள்ள பௌத்த சிங்கள மயமாக்கல் நோக்கில் ஸ்ரீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (22-8-2016) நடைபெறும் நடைபயணத்திற்கு தமிழ்த்...

கனகாம்பிகை புத்த விகாரை அமைப்பை கண்டித்து கிளிநொச்சியில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு

கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...
Ad Widget

வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு

முன்னாள் போராளிகள் மனம் தளராது மன தைரியத்துடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்....

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் விஸ்தீரணமாக காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள காணி மாவட்ட செயலாளர் ஊடாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இக்காணி விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கில் விகாரைகளை அமைக்க சிங்கள மக்களுக்கு உரிமையுள்ளது: சுவாமிநாதன்

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை...

வடக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதில் என்ன பிரச்சினை? கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள மக்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் காணிகளையும், இந்து ஆலயங்களின் காணிகளையும் ஆடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது...

சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை...

உறுதிமொழியை ஏற்க மறுத்த பரவிபாஞ்சான் மக்கள், ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர். குறித்த பிரதேசத்தின் 4 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கமுடியுமெனவும், ஏனைய 16 ஏக்கர் காணிக்கு இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மக்களை அவர்களது போராட்டத்தைக்...

நிலங்களை மீள வழங்கக் கோரி தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம்

கிளிநொச்சி - பரவி பாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாம் எல்லைக்குள் இருக்கும் தமது இடங்களை வழங்குமாறு கோரி, அப் பகுதி மக்கள் இன்று தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 13ம் திகதி முகாமுக்கு முன்னாள் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்தனர். இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் தமது நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், குறித்த...

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்குக் கிழக்கில் 3000 வீடுகள்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்குக் கிழக்கில் 3000 வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளது. இதற்கான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவாகியுள்ளன. யுத்தத்தினால்...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை...

முகமாலையில் கண்ணிவெடி: ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு கண்ணிவெடி வெடிப்புச் சம்பவங்களில் ஒரு கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்தோடு, மற்றொரு சம்பவத்தில் பொது மகன் ஒருவர் பலியாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12 திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த...

இரவு பகலாக தொடர்கிறது பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்....

கவனிப்பாரற்ற நிலையில் பரவிப்பாஞ்சான் மக்கள்!!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில்...

வட்டுவாகல் காணிகளை விடுவிப்பிதற்கா இராணுவத்தளபதி முல்லைத்தீவுக்கு பயணம்?

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...

பௌத்த விகாரை அமைப்பதற்கெதிரான கலந்துரையாடல் திட்டமிட்டபடி இடம்பெறும்

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த ஆலயம் அமைக்கப்படுதல் உட்பட வடக்கில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும், இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்து பேசவும், ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டவாறு இடம்பெறும். திகதி: 13-08-2016 (சனிக்கிழமை) நேரம்: பி.ப 4.00...

கிளிநொச்சியிலும் லைக்காவின் நிதிப் பங்களிப்புடன் மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

தபால் ரயில் மீது கல்வீச்சு!! 3 பெட்டிகள் சேதம், பலர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...

50 ரூபாய்க்கு முடிவெட்டும் இராணுவத்தினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார...

தொடரும் முன்னாள் போராளிகள் மரணம்! மற்றொரு போராளியும் சாவு!!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...
Loading posts...

All posts loaded

No more posts