Ad Widget

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி 5பேர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குட்பட்டவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Posts