உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புத்தர் சிலை

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக...

விச ஊசி விவகாரம், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை ஆரம்பம்!

விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...
Ad Widget

காற்றில் பறந்த உறுதிமொழிகள் மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும்...

முன்னாள் போராளியை கைதுசெய்தோம்: பொலிஸ்

புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26), இனந்தெரியாத நபர்களினால் கைதுசெய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வருடங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருந்த தன்னுடைய மகனையே, இனந்தெரியாதோர் இவ்வாறு கைதுசெய்து, கடத்திச் சென்றுவிட்டதாக அவருடைய தாயார், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 'வெள்ளைவான்...

சன்னங்களுடன் 410 பேர் வாழ்கின்றனர்!!!

யுத்தம் காரணமாக துப்பாக்கி, மோட்டார், குண்டுகள் மற்றும் துப்பாக்கி சன்னங்கள் ஆகியவற்றை உடலில் தாங்கியவாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் 410 பேர் வாழ்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில், 'தற்போது இனங்காணப்பட்டுள்ளவர்களில் 113 பேர் பாடசாலை...

கிளிநொச்சியில் கைதான முன்னாள் போராளி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கிளிநொச்சியில் – ஏ9 வீதி 155 ஆவது கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர்...

புத்தர் சிலை உடைப்பு : தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது

வன்னியின் கனகராயன் குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு...

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி 5பேர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்டவர்...

வெள்ளைவானில் வந்தவர்களால் முன்னாள் போராளி கைதா? கடத்தலா??

கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் மூன்று மணியளவில்...

புத்தர் சிலை உடைப்பு!

கனகராயன் காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கனகராயன் குளப் பகுதியில் அமைந்துள்ள விசேட காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்த 210ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு முன்னால் 3அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றும் ஒன்றரை அடி புத்தர் சிலையும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையே...

 25 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி மரணம்

முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது, மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த...

பொலீஸாரின் உதவியுடன் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடரந்து ஈடுபட்டிருந்தனா். தமக்கு 7 வருடங்களாக காணி விடயம் தொடா்பில் அதிகாரிகளினால் அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரத்தில் எடுப்பட்டவா்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 1983ஆம்...

இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்!

கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்!

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...

“முல்லை, கிளி. விகாரைகளை சுவாமிநாதன் அகற்றுவாரா?”

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளை தடுத்து நிறுத்த, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அகற்ற முடியாது. எனினும், புதிதாக அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைகள் மற்றும்...

முல்லையில் குடும்பமொன்று உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தந்தை,தாய்,பிள்ளைகளென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதாக...

இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கினார் பிரதேச செயலர்!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர். பிரதேச செயலரின்...

விவசாயிகளுக்காக அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். சஞ்சீபன் சாதனை

விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும்...

உறவுகளை பறிகொடுத்த பெண்ணின் காணியை பறித்து அரச வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான நடைபயணம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய...
Loading posts...

All posts loaded

No more posts