கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு...

கிளிநொச்சியில் ஏழு நாட்களாக 14 வயது சிறுவனை காணவில்லை!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை சிறுவனின் தந்தை வழங்கியுள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 9-ல் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த...
Ad Widget

அரச வேலைவாய்ப்பை பெற தமிழ், சிங்கள மொழிகள் அவசியம் – மனோ வலியுறுத்தல்

எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்சி, தேசிய மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) வட...

இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இருபாலைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த வேன் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்ததால்,...

அரசியல் தலைவர்களுக்கு இந்து சமயப் பேரவை அழைப்பு!

நாட்டில் மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்ற நிலை காணப்படுகிறது. அதனை மாற்றியமைத்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்து மக்கள் குறை கேள் அரங்கம் ஒன்றை நடாத்துவதற்கு சகல தரப்பினருக்கும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அழைத்துவிடுத்துள்ளது. இந்த அரங்கம் வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம்...

2 வருடங்கள் உறவுகளுக்காக காத்திருப்பு – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!

உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் (09) சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11...

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு பணிப்புரை!

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான...

சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள்...

NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது

வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) அனைவரும் பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நீங்கள் புதிய தொழில்முயற்சி ஒன்றை ஆரம்பிக்க விரும்புகின்றீர்கள் அல்லது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றீர்கள் இந்நிலையில் உங்களுக்கு ஒரு அலுவலகம் தேவை அதற்காக முதலீடு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான புதிய அனுமதியட்டை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இந்த நடைமுறை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்கள், பார்வையாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...

நாய்களிடமிருந்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் முதல் முறையாக நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறித்த நோய் இதுவரை காலமும் தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்று பேராதனை...

யாழில் மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது....

கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்க விழிப்புணர்வு அறிவித்தல்

புதிய மாணவர் அனுமதி தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம் இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான...

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில்...

வடக்கில் இன்றும் கனத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில், இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை...

யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னயில் நோயாளர்களுடன் தொடர்புடைய எவரும் நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த தடை!

கொழும்பு அர­சின் 2006ஆம் ஆண்டு சுற்­ற­றிக்­கைக்கு அமை­யவே, நோயா­ளர் பகு­தி­யில் கமரா வச­தி­யு­டைய நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தனை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றோம் என்று யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். அங்கு பணி­யாற்­றும் மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் கட­மை­நே­ரத்­தில் நவீ­ன­வகை அலை­பே­சி­ க­ளைப் பயன்­ப­டுத்­தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில்...

மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15ஆம் திகதி வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்இ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts