Ad Widget

ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியும்!

ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, தற்காலிகமாக ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொதிகளைப் பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளைச் சோதனையிடுவதற்காக, விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts