குருந்தூர் மலை விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிணை

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு...

மதுபானசாலையை அகற்றுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம்!

உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை இப்போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு...
Ad Widget

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும்...

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸாரின் விசாரணையில் குறித்த பாட்டியும், பேத்தியும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர் என்பதும்,...

நெடுந்தீவில் 19 மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அவர்கள் பயணித்த 3 படகுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்த கடற்படையினர், அவர்களை நீரியல்...

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் காணி விடுவிப்பு!!

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் உள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதிக்கான காணியே இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது காணிகள் மற்றும் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சிச்...

சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம்...

தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் -அமைச்சர் டக்ளஸ் உறுதி

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் நேற்று (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்...

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை...

கிளிநொச்சி உயர்தர பாடசாலை மாணவி மாயம்! பொதுமக்களின் உதவிகோரியுள்ள பொலிஸார்

கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள உயர்தர பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த மாணவியைக் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில்...

ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு!

மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார். இதன் பின்னர்...

மல்லாகம் நீதிமன்றத்தில் 50Kg கஞ்சா மாயம்!

மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளுக்காக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போய் உள்ளதாக தெரிவித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பதிவாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெல்லிப்பழை பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற பதிவாளர் விடுமுறையில் சென்றுள்ளார். மீண்டும் 10ஆம் திகதி பணிக்கு...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள், குறித்த அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் உரியவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

வைத்திய சேவைகள் இன்று முடங்குமா?

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று ( செவ்வாய்கிழமை) பல வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை வைத்தியசாலைகளின்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்குவது கேள்விக்குறியே: கஜேந்திரகுமார்

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (11.09.2023) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம்...

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு!

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க...

வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கும் புடின்: அச்சத்தில் முக்கிய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதியை எதிர்வரும் நாட்களில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஐந்தாவது நாள் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட...
Loading posts...

All posts loaded

No more posts