Ad Widget

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனைத்...

சுழிபுரத்தில் புத்தர் சிலை!! : அச்சத்தில் மக்கள்!!

சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம்...
Ad Widget

சாந்தனின் வித்துடல் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது!

சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது! சாந்தனின் புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் விதைக்கப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம்...

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இன்று தொடக்கம் மின் சாரக்கட்டணத்தை 21.9 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்டணத் திருத்தம் போதுமானது இல்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர்...

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர்!!

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை...

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைத் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10...

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் !

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025″இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான http://www.facebook.com/president.fund மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான...

நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் (04.3.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பம்...

நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்!!

சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் முன்னாள்...

யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதற்காக இந்திய அரசு 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளுக்கு மார்ச் 2025க்குள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. காற்றாலை மூலம் 530 கிலோவோட்,...

பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி!

சாவகச்சோி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளார். 18 வயதுடைய பரணிதரன் என்ற...

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைக்க நடவடிக்கை!

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத்...

ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு!!

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு தான் பிரதமராக இருந்த போது அரச...

பதவி துறந்தார் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர்!!

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக குழுத்தெரிவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவு மற்றும் மகாநாட்டை நடத்துவது தொடர்பான கட்டாணைகள் பெறப்பட்ட வழக்கு இன்று திருமலை மாவட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு சுமந்திரன் அவர்களை தவிர மற்ற அனைவரும் மன்றுக்கு ஆஜராகி இருந்தார்கள். மக்கள் நலன் கருதியும் கட்சியின் எதிர்கால...

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனம் : பதில் அதிபரைத் தடுப்பது சட்டவிரோதம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

மத்திய கல்லூரி அதிபர் நியமனம் முறைப்படி இடம்பெற்றும் அவரை பதவியேற்கவிடாமல் பதில் அதிபர் தடுப்பது சட்டவிரோதம் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ். மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திபில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார். இதனையடுத்து வட...

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன. இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா்...

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று (27) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்....

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது...

இன்று அதிகபட்ச வெப்பநிலை!! மக்களுக்கு எச்சரிக்கை!!

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
Loading posts...

All posts loaded

No more posts