- Tuesday
- May 19th, 2026
தெற்கில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு மக்களிடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள உலர் உணவு உள்ளிட்ட பல பொருட்கள் இன்று தெற்கிற்கு எடுத்துவரப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத் திணைக்களங்களின் பூரண ஒத்துழைப்புடன் வடக்கில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களே இன்று எடுத்துவரப்படவுள்ளன. இந்த பொருட்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,...
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் இன்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அருளின்ப தேவன், குணசீலன், யோகரூபன் ஆகியோரே தமது விடுதலையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்த தங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது....
பாட்ஷா படத்துக்கு முன்பு வரை ரஜினி படங்களின் உருவாக்க முறையே வேறு. படங்கள் அறிவிக்கப்படும். முதல் நாளே படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகும். பின்னர் குறித்த இடைவெளியில் சில ஸ்டில்களை பிஆர்ஓக்கள் தருவார்கள். அடுத்து படம் வெளியாகும். முத்து படத்துக்குப் பிறகு படங்களின் ஸ்டில்களை வெளியிடுவதில் கெடுபிடி காட்டினர். குறிப்பாக பாபாவில் அனுமதியின்றி எந்தப் படமும்...
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலைப்பழி சுமத்தி கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்...
யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக...
நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர். அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரே தொழிநுட்ப கல்லூரியில் போதுமான இட வசதிகள் இருந்தும் சுமார் 500 மாணவர்கள் பயிலும் கல்லூரியில் வெறும் 15 தமிழ் மொழிமூல மாணவர்களே...
ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதகா தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று...
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்ற அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
எவராக இருப்பினும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என வட. மாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத் தலைவர் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன்...
8 நாடுகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. ‘மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1998ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற முதல்...
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக மேலதிகமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட...
அவுஸ்ரேலியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்மிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள குறித்த பயணி, விமானியின் அறைக்குள் பிரவேசிக்கவும் முயன்றுள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும், சாமர்த்தியமாக செயற்பட்ட சக பயணிகள் குறித்த பயணியை மடக்கிப்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு...
யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால்...
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்பாட்டு அழிப்பு முதல் அதன் பின்னரான இன அழிப்பு வரை, அவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ். பொது நூலக முன்றலில்...
உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான நேற்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் டோனி மைதானத்திலிருந்த இந்திய அணியின் வீரர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டுவந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போதே டோனி குளிர்பாணங்களுடன் மைதானத்துக்குள் நுளைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். உலகில்...
காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர். காணாமலாக்கப்பட்டவர்கள் எந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் தெரியப்படுத்தினால் அங்கு தாம் அழைத்துச் செல்வதாக அண்மையில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அதனையே நானும்...
Loading posts...
All posts loaded
No more posts
