சுமந்திரன் விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் நீதிமன்றபதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் மேற்படி...

யாழில் நடிகர் தனுஷிற்கு எதிராக களமிறங்கிய இளைஞர்கள்!

நடிகர் தனுஷ் நடித்த VIP 2 படத்தில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடித்தமையால், யாழில் அவருக்கு எதிராக கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளது. மாரி திரைப்படத்தில் புகைத்தல் காட்சிகளில் நடித்திருந்த நடிகர் தனுஷிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, தனுஷ் தனது திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வைத்தியர் அன்புமணி ராம்தாஸ்க்கு...
Ad Widget

சமுர்த்தி திட்டத்தை மேலும் பலப்படுத்துவோம்: ஜனாதிபதி

சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம்...

எஞ்சியுள்ள கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

கேப்பாப்புலவு மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள காணியில் 111 காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இராணுவ முகாமினை வேறோரு இடத்தில் அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும்...

அமைச்சு பதவிக்காக நீதிமன்றம் செல்ல தயார் : டெனிஸ்வரன்

தாம் வகிக்கும் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை ஆளுனர் நினைத்தால் போல் சுவிகரிக்க முடியாது என வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டு கோளுக்கமைய அவ்வாறு அமைச்சு பதவியை சுவிகரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து விலக்குவதற்கான அனுமதியை கடிதம் ஒன்றின் மூலம் முதலமைச்சர்...

வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனும் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெனினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உடனிருந்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் அண்மைய காலமாக நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அமைச்சரவையில்...

பொலிஸாருக்கு நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் பாராட்டு

யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 28 ஆம் முதல், 25 நாட்களுக்கு இடம்பெற்றது. இதற்மைய நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாதுகாப்பு கடமையில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த...

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் யாழில் மீட்பு

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார். 17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில்,...

டெங்கு நோய் தொற்று காரணமாக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்...

அனைவருக்கும் 10%போனஸ் Dataவினை வழங்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானம்!!

இணைய பக்கேஜ்களுக்கு 10% போனஸினை வழங்குவதற்கு அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானித்துள்ளனர். 2017 ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இணைய பக்கேஜ்கள் /அட்டைகளுக்கான தொலைத்தொடர்புகளுக்கான வரியானது குறைக்கப்பட்டமையினால் அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10%போனஸ் Dataவினை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.அரசாங்கத்தினால் இணைய பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்புவரியானது அகற்றப்பட்டமையானது...

உரும்பிராய் சந்தி வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்!!

உரும்பிராய் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் சந்தியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்று இருந்த இளைஞர்கள் அங்கு தகாத வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு வாக்குவாதப்பட்டுள்ளனர். அதனை அடுத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் , தொழில் செய்யும் இடத்தில் இவ்வாறான வார்த்தை...

பரிந்துரைக்காத ஒருவரை அமைச்சராக்க டெலோ எதிர்ப்பு

“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமைச்சர் பா.டெனிஸ்வரன் டெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு...

‘டெனிஸ்வரனை நீக்கிவிட்டேன்’ : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

“வடமாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நேற்று (22) அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “டெலோ விடுத்த கோரிக்கைக் கேற்ப விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாது எனவும் அவரை...

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு : மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம்

தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி...

யாழில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 05 பொலிஸாரும் மீண்டு விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது துப்பாக்கிப் சூடு மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று (22.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர்...

இலங்கையில் பொலித்தீன் பயன்படுத்தினால் 10,000 தண்டம்!

சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது. 20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த...

எனது பிள்ளையின் படுகொலைக்கு நீதி வேண்டும்: கஜனின் தாய் மீண்டும் வலியுறுத்து

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் தனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை சேர்ந்த நடராசா...

ஆவாக்குழுவின் அடையாள அணிவகுப்பு ஒத்திவைப்பு!

யாழ்.பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த இருந்த நிலையில், மன்றுக்கு பதில் நீதிவான் சமூகமளித்திருந்திருந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில்...

கேப்பாபிலவு நிலம் விடுவிக்கப்படும்: சந்திரிக்கா

கேப்பாப்பிலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டார நாயக்கா குமாரதுங்க காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். கேப்பாப்பிலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற குழுக்களின்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது : சுவாமிநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்த அமைச்சர், நீதி அமைச்சே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். அநுராதபுரம் சிறைச்சாலையில்...
Loading posts...

All posts loaded

No more posts