- Thursday
- May 14th, 2026
‘புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை எனவும் அவை காணாமற்போயிருந்தன எனவும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது’ என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன்...
யாழ்பாணத்திற்கு இரண்டாவது முறையாக நேற்று (திங்கட்கிழமை) நிலக்கரி ரயில், வந்துள்ளது. காலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து. யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த குறித்த ரயிலில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில் அங்கு குறித்த ரயில் செல்லாதெனவும் இன்று காலை 10 மணிக்கு...
மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில்...
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம் என நேற்றுமுன்தினம் நடந்த தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்படப் பலர் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர் எனக்...
வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த விடுதியில் நேற்று முன்தினம் மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார்....
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு மாவட்டமாகும். தற்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், மாவட்ட செயலக வளாகத்திலும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று...
யாழ் மாநகரசபையின் முதல்வராக ஆனல்ட் பரிந்துரைக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடுவதில்லையென ஈ.பி.டி.பி முடிவெடுத்துள்ளது. சொலமன் சிறில் முதல்வராக அறிவிக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வராக ஆனல்டை நியமிக்க சுமந்திரன் பகிரங்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் கணிசமான விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், ஆனல்டை முதல்வராக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக...
தேசிய ஒலிம்பிக் குழவின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலிலேயே தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டென்னிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகின்றார். இதேவேளை,...
இலங்கையில் நிலவும் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளியினால் இதுவரை 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளதாக கட்புல மருத்துவநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். அனுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மன்னார், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்திலேயே மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். எனவே கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் கண்ணாடிகளை...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும்...
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வு எதிர்வரும் 26ம்திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர...
யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும் திருமதி அனுஷா பாலகிருஷ்ணன் எனும் பெண்மணி யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு தான் மாத்திரம்...
யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார். மத்திய அரசின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டடம்...
யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது அது திடீரென தீப்பற்றியதால் அந்நபர் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையெ உயிரிழந்துள்ளார். நீர் இயந்திரத்தை இயக்குவதற்காக மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது பெற்றோல் போத்தலில் தீப்பற்றி...
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)...
தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர்...
Loading posts...
All posts loaded
No more posts
