இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் இருவர்மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பது என கட்சி தீர்மானம் எடுத்த பின்னர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் ஆகிய இருவரும் கட்சியின் தீர்மானத் தினை மீறியமையினால் இருவர்மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதற்கமைய திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவது என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.