தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்குள் வழிப்பறி கொள்ளைகள் அதிகரிப்பு

தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த காவல்துறை பிரிவுக்குள் மாத்திரம் 15 வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மல்லாகத்தை அண்மித்த பகுதியில் காங்கேசன்துறை பிரதான வீதி வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த...

போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாது: சிறிரெலோ கட்சியினரால் பெண்களுக்கு அச்சுறுத்தல்!

அண்மையில் உயிரிழந்த திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாதென வவுனியாவில் மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தம்மை அச்சுறுத்தியதாக மூன்று பெண்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அச்சுறுத்தப்பட்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், “போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பாக...
Ad Widget

நினைவுத்தூபி அமைப்பதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நினைவுத்தூபி அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸாரினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபியை புனரமைப்பதுடன்,ஏனைய சகல...

விஜயகலா எம்.பி பிணையில் விடுவிக்கப்பட்டார்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மணித்தியாலயங்களில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை 5 லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின்...

20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகரும் வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள செய்தியிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், “அரபிக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்கின்றது. தற்போது சூறாவளியாக வலுவடைந்ததன் காரணத்தினால் இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட...

மீசாலையில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்

மீசாலை, புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்பாகவுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு பத்து பேருக்கும் அதிகமானோர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட, அவர்களுக்கு வாள்களை காட்டி அச்சுறுத்தி, தாலிக்கொடி...

விஜயகலா மகேஸ்வரன் கைது!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவினரால் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு...

தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பதை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு

தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. “கைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. தூங்கும் அறையில் கைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை...

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இராணும் தயார் நிலையில்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும், பிரச்சினையான நிலமைகளை கட்டுபடுத்த, எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்ட தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு...

கிளிநொச்சி நகர் ஏ9 வீதியால் பயணித்த வாகனங்களை மறித்து பணம் கோரி மிரட்டல்!

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வாகனங்களை பொல்லுகளை காட்டி நிறுத்தி பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களில் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதனால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக மக்கள் திரண்டனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது. கிளிநொச்சி...

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம் – மனோ கணேசன்

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார். ஆனால், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதகதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில்...

அறிவித்தலைத் தொடர்ந்து வடமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்!

வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். யாழ். மாவட்ட எல்லைப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை வெளியேறுமாறு பிரதேச செலரால் விடுக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறிவருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு அவர்கள் வெளியேறுவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் குறிப்பிட்டார். கடந்த சில...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்களும் சாதனை!!

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச்...

புலிகளின் தளபதிகளுக்கு நினைவுத் தூபி அமைக்க தடை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன்போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக...

குணசீலனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள்!

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக மேல் விசாரணைகளை நடாத்துவதற்கும் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தினை அனுப்பிவைக்கவுள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பண்டத்தரிப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்து...

மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி முன்னெடுப்பதே உத்தேசம் என அமெரிக்காவுக்கு எடுத்துரைத்தார் விக்னேஸ்வரன்

மக்கள் இயக்கம் ஒன்றை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து அதனை முன்னெடுத்துச் செல்வதுதான் என்னுடைய உத்தேச நிலைப்பாடு என்று அமெரிக்காவிடம் எடுத்துரைத்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் றொபேர்ட் கில்ரன், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறுயாருமா? – முதலமைச்சர் கேள்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறு யாருமா? என வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். சம்பந்தன் மௌனம் காப்பதனால் தனக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பதில் தூதுவர் ரொபேட் ஹில்டன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts