விக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் – மஹிந்த

சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், இனவாதக் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு...

அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் கான்பராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் சிறு தீக்காயங்களுக்கு...
Ad Widget

வட்டுக்கோட்டையில் பயங்கரம்! கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை, மகள் வைத்தியசாலையில்!!

வட்டுக்கோட்டையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது , கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஏற்படும் அதிகரிப்பு அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நாட்டில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...

ஆவா குழு தொடர்பாக ஆளுநரின் கருத்தில் சந்தேகம்: சி.வி.விக்னேஸ்வரன்

ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் ஒழிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை நேற்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆளுநரால் 3...

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கே...

வடபகுதியின் முதலமைச்சராக பணிபுரிந்துவருவது பலருக்கு இடைஞ்சல் – முதலமைச்சர்

காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா கசூரினா சுற்றுலா மையம்இ காரைநகர் 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பிரதம அதிதியூரை குருர் ப்ரம்மா ...................... இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும்...

என்னை பழிவாங்குவதாக நினைத்து தமிழினத்தை பழிவாங்கி விடாதீர்கள்- முதலமைச்சர் உரை!

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று...

வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்!

வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு நடைபெறுகிறது. அந்தவகையில், வடக்கு மாகாண சபைக்கென ஒரு கீதம் இல்லாத...

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த தமிழரசுக் கட்சியிலிருந்து இடைவிலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....

அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல – தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் – பொ.ஐங்கரநேசன்

அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன்...

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும்...

யாழ்.அல்லைப்பிட்டி அகழ்வாராட்சி தொடர்பான தகவலை வெளியிட்டது சீனா

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, சீனாவின் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் பண்டைய கடல்சார் பட்டுப்...

போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளர் நடராஜா போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த...

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் ஆட்டுக்கறி சாப்பாடு

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியின் இறுதி அமர்வு இன்று(23) நடைபெறவுள்ளது. இதையொட்டி உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு மதியபோசனத்துக்கு சிறப்பாக பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கறி சாப்பாடு வழங்குவதற்கு பேரவைச்செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. சபை அமர்வுகளின் போது வழமையாக கோழி இறைச்சி, மீன் கறியே வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களில் இரு தடவையே ஆட்டுக்கறி வழங்கப்பட்டது. இதேவேளை...

வருட இறுதிக்குள் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பான உத்தரவை பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மாகாண ஆளுநர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம்...

வவுனியாவிலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்: சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்திலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வட.மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்த வவுனியா தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வவுனியாவில் இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி...

அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்? : அங்கஜன் மறுப்பு

அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்போவதாக எந்த இடத்திலும் நான் கூறவில்லை என பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கடந்த 21/10/2018 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் நான் எந்த ஒரு...

பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஸன் மற்றும் கஜன் ஆகியோரது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது.
Loading posts...

All posts loaded

No more posts