Ad Widget

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் ஆட்டுக்கறி சாப்பாடு

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியின் இறுதி அமர்வு இன்று(23) நடைபெறவுள்ளது. இதையொட்டி உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு மதியபோசனத்துக்கு சிறப்பாக பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கறி சாப்பாடு வழங்குவதற்கு பேரவைச்செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

சபை அமர்வுகளின் போது வழமையாக கோழி இறைச்சி, மீன் கறியே வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களில் இரு தடவையே ஆட்டுக்கறி வழங்கப்பட்டது. இதேவேளை இன்றைய அமர்வுக்கு சபை உறுப்பினர்கள் பலரும் தங்களுடன் வெளிநபர்கள் இருவரை அழைத்துவருவதற்கான பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர். எனத்தெரியவருகின்றது.

Related Posts