- Sunday
- May 10th, 2026
மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. இதற்காக 2018...
தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் கட்சியை நீடிப்பதற்கு அனுமதியளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளம் சட்டத்தரணிகள் பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்தனர். எனினும்...
வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக்...
வடக்கு மாகாணத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் தென்கிழக்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால் இன்றிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடக்கில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் நாட்டின்...
“தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை...
யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா...
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எவ்வாறு எமது...
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாறிய அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட...
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையைப்...
யாழ்ப்பாணம், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த படகானது அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதுடன், அப்படகினை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவந்த நிலையில், இவ்வாறு...
இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த...
சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக...
“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் .தனைத்...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றில் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை...
வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது. கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இமையாணன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர், குறித்த வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கி...
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான கஜா புயல், தமிழகத்தைவிட்டு நகர்ந்து இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது.தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது....
கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கஜா புயல் தொடர்பாக நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். மாவட்டத்தில் நிலைக்கொண்டிருந்த கஜா புயல் நேற்று மாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை...
நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த கதிரை பொலிஸார்மீது விழுந்ததனால் பொலிஸார் சிலர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது....
மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி...
Loading posts...
All posts loaded
No more posts
