Ad Widget

இன்று மாலை கூட்டமைப்பு எம்.பிக்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றில் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பார்களா? என்பது தொடர்பில் அறியமுடியவில்லை.

Related Posts