சினிமா பாணியில் இளம் பெண் கடத்தல்!!! காவல்துறையினர் அசமந்தம்!!

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர்...

நீதவான் உத்தரவை ஏற்று அழைத்துச் சென்ற சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பெண் சட்டத்தரணி!

யாழ். பருத்தித்துறையில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பருத்தித்துறை நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். இதன்படி தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குறித்த சந்தேகநபரை பெண் சட்டத்தரணி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம்...
Ad Widget

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர் மறைவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் ஸ்தாபர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார். இவர் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி, திக்கத்தை தனது பிறப்பிடமாக கொண்டவராவார். மேலும் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இவர் அரசதுறையில் சேவையாற்றிய...

ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர்...

நோயாளர் காவு வண்டிகளில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

வடமாகாண வைத்திய சாலைகளின் மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவுத்தியுள்ளது. வடமாகாண வைத்திய சாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய மருந்துக்குப்பிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நோயாளர் காவு வண்டிகளை வைத்திய சாலைகள் பயன்படுத்தி வந்துள்ளன. அதனால்...

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை – கூட்டமைப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன்,...

குளிரான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்!

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

சீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கம்!

பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது. அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் "இருண்ட பகுதி´ என்று அழைக்கிறார்கள். அந்தப் பகுதியில் முதல் முறையாக...

அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம், கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார். “சந்தேநபர்கள் நால்வருக்கு எந்தத் தொடர்புமில்லை. இருவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பவர்கள்....

இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை தனது வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணி!!!

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால் பெண் சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் பருத்தித்துறை நீதிமன்ற மன்ற வளாகத்துக்கும் வெளியேயும் இந்தப் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு...

நியாயமான விடயங்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவளிக்கும் – சுமந்திரன்!

நியாயமான அதிகார பகிர்வு போன்ற விடயங்களில் பெரும்பான்மை புலம்பெயர் சமூகமே ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஒர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்....

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவுதினம் அனுஷ்டிப்பு!

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் 13 வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. திருகோணமலை கடற்கரையில் நேற்றையதினம் (புதன்கிழமை) மாலை குறித்த நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. திருகோணமலை இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு தின நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த...

கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டது: தவராசா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைத்த பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டதாக வட.மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல் அரசியலமைப்பு வரைவு வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனவே...

ஒற்றையாட்சியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது: சித்தார்த்தன்!

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஒற்றையாட்சி முறைமையை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அறிந்த வகையில் ஒற்றையாட்சி என்ற வகையிலேயே அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டுள்ளது. அதில்...

ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை

யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச்...

தப்பியோடிய ஆயுததாரியை தேடுவதற்கு பெருமளவு இராணுவம் குவிப்பு!!

வவுனியா வடக்கின் புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு பெருமளவு இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்தனர்....

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்....

யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு...

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...

யாழ். நீதிமன்ற நீதவானாக கடமையை பொறுப்பேற்றார் பீற்றர் போல்!

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவானாக நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் பதவியேற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள், நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார். மலையகத்தில் பிறந்த நீதவான் அந்தோனி...
Loading posts...

All posts loaded

No more posts