Ad Widget

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர் மறைவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் ஸ்தாபர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார்.

இவர் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, திக்கத்தை தனது பிறப்பிடமாக கொண்டவராவார்.

மேலும் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில், தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை துறந்தார்.

இதேவேளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களில் இவரும் ஒருவர் என்பதுடன், இறுதிகட்ட யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts