சிறப்புத் தேவையுடைய சிறார்களின் வளர்ச்சிக்கு யாழ். பல்கலை. மாணவர்கள் வாகனங்களைச் சுத்திகரித்து நிதி சேகரிப்பு!!

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலை கழக முன்றலில் நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம் , மாணவர்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை நல்கி இருந்தனர்.

யாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.' மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்ற...
Ad Widget

விக்கியின் கூட்டோடு இணைய தயார் – சிறிகாந்தா

முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்த உறுப்பினர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி...

வல்லரசுகளின் பூகோளப் போட்டிக்கு மத்தியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு – கஜேந்திரன்

இலங்கை தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை தாங்கள் கடந்த பல வருடங்களாகச் சொல்லிவந்த போதும், தமிழ் தரப்புக்களே இது நடைமுறைச் சாத்தியமற்றது என தங்களை கேலி செய்ததாகவும்...

விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ சிங்ஹலே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரசாத்தினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.வி விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ஒன்று, இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின்...

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த...

பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரங்கள் டெங்கை ஒழிப்பதற்கான அவசர காலமாக...

இன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி!

சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இன்று (13) அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இந்த முச்சக்கர வண்டியை சுற்றுச்சூழல் விரும்பி என அறிமுகப்படுத்த உள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அறிமுக விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இந்த...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லையில் இடையிடையே மழை பொழியும்!!!

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல்,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்!

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை...

மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்!

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

வீட்டில் கொசு,பூச்சி,பல்லி, எலிகளை கூண்டோடு ஒழிக்க இந்த முறையை செய்ங்க!

கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம். கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைத்து, அதை கரப்பான்...

யாழில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு: சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சிகள் அடையாளம் காட்டினர்

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர். அதனால் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது அடையாள அணிவகுப்பை நடத்த...

வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு! – இரா.சம்பந்தன்

வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தடவைகள் அரசாங்கத்தை நினைவுபடுத்தியதாகவும், வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்துக்குள்ள ஆர்வம் வடக்கு மாகாண விடயத்தில் காணப்படாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக சிங்கள...

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரிய போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட...

பட்டாதாரிகளான மாற்றுத்திறனாளிகள்! முன்னாள் போராளிகள் சாதனை!

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு வந்திருக்கின்றது. முன்னாள் போராளிகளான பிரதீபன் , மற்றும் விக்னேஸ்வரன் (B.A.in. Sociology Jaffna university Degree holders)இந்த இருவரும் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் இன்று...

துன்னாலையில் சிசு கொலை தொடர்பில் தாயார் கைது!!

இரண்டரை மாத ஆண் சிசு கிணற்றுக்குள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தாயார் மாறுபட்ட இரு வாக்குமூலங்களை வழங்கிய நிலையில் அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதனால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி துன்னாலை குடவத்தை...

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்?

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு...

அதிகாலையில் வீடு புகுந்து இளைஞன் மீது சூடு!!

அதிகாலையில் வீடு புகுந்தவர்கள் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இடியன் துவக்கால் இளைஞனின் கால் பகுதியில் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு மங்கை குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts