கொரோனா வைரஸ் உணவு பொருட்கள் ஊடாக பரவாது: சுகாதார அமைச்சு!!

கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே...

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கோழி இறைச்சி சாப்பிட்ட பெண் பலி!! மேலும் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!!

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி சாப்பிட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகாதேவன் சிகேந்தினி (35) என்ற பெண்ணே உயிரிழந்தவாராவர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கோண்டாவில் வடக்கு பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு உணவாக கோழி இறைச்சி மற்றும்...
Ad Widget

அரசின் அடிமைகளாக தமிழர்களை மாற்றியவர் சுமந்திரனே!! : விக்னேஸ்வரன்

கடந்த அரசின் கைக்கூலிகளாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டனர். அதற்கு முக்கியமானவர் சுமந்திரனே. அரசின் அடிமைத்தனத்திற்குள் எமது மக்களை கொண்டு சென்றவர் அவர்தான் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது மாணவனாகிய சுமந்திரனை நான் தனிப்பட்ட...

இராணுவம் காணிகளை விடுவித்த போதும் மக்கள் மீள்குடியமர ஆர்வம் காட்டவில்லை – யாழ். தளபதி தெரிவிப்பு

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்” இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி படைத் தலைமையகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இராணுவக் கட்டளைத்...

ஶ்ரீபாத கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் தொற்று: 100க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை!!

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று (புதன்கிழமை) சுமார் 100 பேரும் இன்று 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கன்...

அரச பஸ்ஸின் சாரதி மதுபோதையில்!!! ; படையினர், பொலிஸாரின் சோதனையில் சிக்கினார்!!

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பபாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து...

பட்டதாரிகளுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

பட்டதாரிகள் மற்றும் அதற்கு நிகரான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு தொழில் வாய்ப்புகளை வழங்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப, பட்டப் படிப்பிற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின்...

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ,தற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும். பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலைகளுக்கு...

கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை!!

கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக...

சிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார் விக்னேஸ்வரன்

சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து...

கொரோனா வைரஸ் – பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவித்தல்!!

கொரோனா வைரசின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில்...

கொரோனா வைரஸ் – மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்...

யாழ் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சிறந்த நடவடிக்கையில் பாதிக்கப்படும் சாரதி காப்பாளர்களைக் கவனத்தில் கொள்ளாத இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களுக் கான சேவை பாதிக்காத...

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கைப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர் தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று...

யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

யாழ். நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரை நாகர்கோவில் பகுதிக்கு...

சரா எம்.பிக்கு ஆசனம் இல்லை!! : உண்மையை ஏற்கின்றார் சுமந்திரன்!!

கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர்காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக்கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் சிறப்பு பரிசோதனை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்க தெரிவித்ததாவது; கோரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான...

தெல்லிப்பளையில் ஹெரோயினை பொதி செய்துகொண்டிருந்தவர்கள் கைது!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துச் செல்லப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த நான்கு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5...
Loading posts...

All posts loaded

No more posts