கொழும்புத்துறையில் 17 கைக்குண்டுகள் மீட்பு!

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில் அத்தனை கைக்குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று காலை வீடொன்றை சுத்தம் செய்த போது, அந்த வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதற்குள் வெடிபொருள்கள்...

அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உடுத்துறை பகுதியில்நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில்...
Ad Widget

காணாமல்போன ஒன்பது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் மீட்பு!

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயுள்ளனர். இதன் பின்னர் அவர்களை கண்டுபிடிக்க...

அமெரிக்காவும், கனடாவும் மேற்கொண்ட சர்வதேச சமரச முயற்சியை முறியடித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கு காரணமானவர் சம்பந்தன்!!

ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான் அவரது நடவடிக்கை. வடமாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்திற்கு எதிராக சுமந்திரன் எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கம். பருத்தித்துறையில் நடந்த...

மின்சார கட்டணங்களில் அரசு அறிவித்துள்ள அதிரடி சலுகை!

மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பெப்ரவரி மாத மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் செலுத்த வேண்டும். பெப்ரவரி மாதத்தில் பாவித்த மின் அகு கட்டணங்களே ஏனைய மாதங்களிற்கும் அறவிடப்படவுள்ளது. இந்த தொகையை செலுத்த 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே...

நாட்டில் நிலைமை மோசமடையும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிப்பு

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமையின் விளைவாக நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையில் குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் தேர்தல் பிரசார கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர...

பெண்ணை மிரட்டி பட்டப்பகலில் கொள்ளை!! ; கொள்ளையர்கள் மூவர் சிக்கினர்

தனித்து வாழ்ந்த வயோதிப் பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த கொள்ளையர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்றது....

கோவிட் -19 நோய்ப் பரவலுக்கு ஏதுநிலை ஏற்படுத்தினர் -யாழில் ஐவரிடம் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்...

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக...

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறக்க அனுமதி, மாணவர்கள் வெளியேறத் தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும் என்றாலும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வரமுடியாது...

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத...

குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார் சிறிதரன்- அங்கஜன்

2013 இல் இரணைமடுவில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்த போது அதை தடுத்து நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிறிதரனே என்று ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மண்டைதீவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவை நீர்...

இன்று காலை முதல் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம்!! பொலிஸாரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு!!

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன், முக கவசம் அணிவது தொடர்பில் கடும்...

யாழ். பல்கலை மாணவியின் பெற்றோரது பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை காத்திருப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும் அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணப்...

“இராமன் முஸ்லிம்களின் நபி, இராவணன் முஸ்லிம் மன்னன்” இது தான் உண்மை- மௌலவி முபாறக்

“இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம். இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது” என்று உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். நாடாளுமன்ற...

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சவாலில் வெற்றி பெறுவேன் – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். வைரஸ் பரவலோடு உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்ற வகையில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்தபோது வெவ்வேறு சவால்கள் எழுந்தபோதும் சிறந்த திட்டங்களுடன் அவை ஒவ்வொன்றையும் வெற்றி கொள்ள முடிந்தது...

ஊரடங்கு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துதல் மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. ஒருநாளில் குறைந்தது 10 பேர் வரையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என...

கொரோனா வைரஸ் – இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 665 பேர் பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2665 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 19 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களில் மூன்றுபேர் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 02 பேர் இராஜாங்கனை, லங்காபுர பிரதேசத்தை...

கொரோனா தொற்று: மருத்துவமனை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

கம்பஹா – ராகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்ட பிற ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதடி சித்த மருத்துவ பீட மாணவிக்கு கொரோனா அறிகுறி!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னரேயே அவர் பொலநறுவையில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் உட்பட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதால் அவருக்கு பிசிஆர்...
Loading posts...

All posts loaded

No more posts