ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு...

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை??

யாழ்.மாவட்டத்தில் கொரோனாவுக்கு பின்னர் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் 7 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை சந்தித்த வடமாகாண ஆளுநர் மாகாணத்தின் சுகாதார நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார். இதன்போதே...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரிடம் மாட்டினர்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், 9 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகளில்...

இளம் பெண் சட்டத்தரணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது மூத்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...

யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். 23, 24 மற்றும் 26 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று...

யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் – விவசாயிகள் கவலை

யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக...

க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் எதுவும் இல்லை – கல்வி அமைச்சு

இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த...

வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் வானிலையில் 'AMPHAN' சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'AMPHAN' என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 நு இற்கும் இடையில் வடமேற்கு வங்காள விரிகுடா...

விமானப் படையின் அம்புலன்ஸ் மோதி குடும்பத்தலைவர் சாவு!

விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார். பளையில் இன்று காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது. பளை – தம்பகாமம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த...

ஜூன் மாதம் 5,000 ரூபா வழங்கப்படாது!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கு வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபா கொடுப்பனவை ஜூன் மாதத்தில் வழங்குவதில்லையென அமைச்சரவை நேற்றையதினம் (20) முடிவு செய்துள்ளது. பொதுத் தேர்தல் வரவுள்ளதால் இந்த கொடுப்பனவை நிறுத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையாக கருதப்படலாமென்பதால்,...

சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானது – காவல்துறையினர்

யாழில் சுகாதார விதிமுறைகளை காவல்துறையினர் தாம் பேண தவறியதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானது எனவும் , அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை எனவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் உட்பட 11 பேரை தனிமைப்படுத்த வேண்டும் என கடந்த ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாண காவல்துறையினர் யாழ்.நீதவானிடம்...

புத்தூரில் பிறந்த சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய் கைது!!

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு நாள்கள் ஆகிய...

இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தில் நீதிமன்ற நடவடிக்கை!!

புதிய காணொலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை செயல்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படியாக புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை இடையே முதல் விசாரணை திட்டம் நேற்றையதினம் தொடங்கியது. அதன்படி, இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலைக் காணொலி உரையாடல் (Video Conference) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக சிறப்பு...

முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை!!

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடலில் எரிகாயம் ஏற்பட்டநிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாபோதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. சிறிலங்கா ரெலிக்கொம்மின் பகுதியளவாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் சீரா நிறுவனத்தினர் வீதியோரமாக கம்பங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி இன்று காலை...

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று(புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. கணவன் விபத்தில் உயிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்...

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி – சித்த ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் நிரஞ்சன் தெரிவித்தார். உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினால்...

ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ள அழைப்பு

ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு அதன் பக்கங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இன்றளவிலும் சினிமாத்துறையை தொழில் மயப்படுத்த முடியாமல்...

யாழ்ப்பாணத்தில் டெங்கு அபாயம்; குடியிருப்புகளில் பரிசோதனை நடத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts