வடக்கிலும் கொரோனா இரண்டாம் அலை ஆபத்து: எச்சரிக்கிறார் வைத்தியர் யமுனானந்தா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள்...

கரவெட்டியைச் சேர்ந்த ஓய்வுநிலை இராணுவ உத்தியோகத்தரின் நெகிழ்ச்சி செயல்!!

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும் முப்படை மற்றும் பொலிஸார் உள்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க இறைவனை வேண்டி 108 நாள்கள் விரதமிருந்த 81 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வயைில் தலை முடியை காணிக்கை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியைச்...
Ad Widget

கீரிமலையில் வெடிபொருளை வெடிக்கவைத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!!

குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கீரிமலை கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்துள்ளனர்....

தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!

அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட...

உரும்பிராய் விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி (வயது 17) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சந்திக்கு அண்மையில், இவர்கள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது....

அங்கஜன் பிறந்தநாளை முன்னிட்டு காணமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தென்மராட்சி இளைஞர் அணியினால் வீடு கையளிப்பு

முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அங்கஜன் இராமநாதன் அவர்களது தென்மராட்சி இளைஞர் அணியினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தற்காலிக வீடு ஒன்று சாவகச்சேரி மந்துவில் மேற்கு பகுதியில் J/346 கிராம சேவகர் பிரிவில் அமைத்து கொடுக்கப்ட்டது. அந்த வீட்டினை கௌரவ அங்கஜன்...

தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர்...

வடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 184 ஆசிரியர்களுக்கு மனநலம் பாதிப்பு!!

வடமாகாண கல்வியமைச்சின் கீழ் உள்ள பாசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களை விசேட மருத்துவ குழுவின் முன் பரிசோதிக்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள 184 ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் தொடர்பாக கல்வியமைச்சுக்கு நெருக்கடிகள்...

இலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா? தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்!!!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் மற்றும் மாரவில புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளான பெண் ஆகியோர் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தியமை கண்டறியப்பட்டிருப்பதாக தொற்று நோய் பிரிவு தலைவர் கூறியுள்ளார். பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மாரவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான பெண்...

சமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். “அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர்கள் 8 பேரை விடுமுறையில் இருந்து அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் கொரோனா சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது.” – என்றார். புனர்வாழ்வு மைய ஆலோசகருக்கு...

ஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின்...

குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ அலுவலகர் நியமனம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர்...

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு: 6 பேருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. அத்தோடு இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கைலாயம் அல்லது ஜெகன்...

திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது என்றும் தெரிவித்தார். கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய...

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!!!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று...

வாள்வெட்டுக் கும்பலின் வீடொன்றில் இருந்து கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள்...

டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு குறித்த டிப்பர் வாகனம்...

வடமாகாணத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா! கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு!-ஆளுநர்

வடக்கில் விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் செயற்படவேண்டும். என பணித்திருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ், பிரதான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவதுடன், கனரக வாகனங்கள் பயணிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஆளுநர் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு பணித்துள்ளார். வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்கள் மற்றும் சட்ட...
Loading posts...

All posts loaded

No more posts