Ad Widget

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலராக கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக இலங்கை அரச நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, களுதாவளை பிரதேசத்தினை சேர்ந்த அவர், இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தரத்தில் உள்ளவர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராக நேற்று (ஒக்.14) புதன்கிழமை பிற்பகல் நியமன கடிதத்தினைப. பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு முன்னாள் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளார்.

Related Posts