Ad Widget

மேலும் 17 பேருக்கு கோரோனா; தேசிய வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 17 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 12 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 325ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Posts